• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உயர் ரக இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவன் உட்பட 8 பேர் கைது

March 3, 2020

கோவையில் போலி சாவிகளை பயன்படுத்தி உயர் ரக இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை அருகே இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் வாகனத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் வந்த இரு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் மூவரையும் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், 16 வயது சிறுவன் ஒருவனின் உதவியுடன் போலி சாவிகள் மூலம் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி விற்று வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து 16 வயது சிறுவன், விக்னேஷ்பாரத், மருதாசலம், சபரி, அப்துல்ரகுமான், ரமேஷ், பிரபாகரன், விக்னேஸ்வரன் ஆகியோரை ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க