March 4, 2018
தண்டோரா குழு
கோவையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுமிகளுக்கான ஸ்கேட்டிங் விளையாட்டு இன்று(மார்ச் 4)நடைபெற்றது.
கோவை டாட் என்ற தனியார் நிறுவனம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்கேட்டிங் விளையாட்டு நடைபெற்றது.இந்த ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர் கலந்து கொண்டனர்.மேலும் ஸ்கேட்டிங் விளையாட்டின் போது புல்லட் வாகன பேரணியும் நடைபெற்றது. கோவை வஉசி மைதானத்தில் துவங்கிய ஸ்கேட்டிங் விளையாட்டு அவினாசி சாலை ஹோப்ஸ் என முக்கிய வழியாக சென்று மீண்டும் அதே வழியாக ரேஸ்கோர்ஸில் முடிவடைந்தது .இந்த ஸ்கேட்டிங்கானது சுமார் 20கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது.