• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளம் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி

November 16, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இளம் காவல் உதவி ஆய்வாளர்களின் விசாரணைத் திறனை மேம்படுத்த இன்று முதல் ஒரு மாதத்திற்கு “விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி” நடைபெற உள்ளது.

இப்பயிற்சியினை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா துவக்கி வைத்தார். இத்துவக்க விழாவில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர் மற்றும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர்கள் பங்கேற்றனர்.

இப்பயிற்சியில் கோவை சரகத்தில் உள்ள கோவை, திருப்பூர்,ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 40 உதவி ஆய்வாளர்களுக்கு காணொளி காட்சி மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.இப்பயிற்சியில் காலை யோகா, உடற்பயிற்சியும், அதன் பின்னர் விசாரணை திறனை மேம்படுவதற்கான பயிற்சி வகுப்புகள்,மாலை விளையாட்டு என ஒரு மாத கால பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க