• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளம் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி

November 16, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இளம் காவல் உதவி ஆய்வாளர்களின் விசாரணைத் திறனை மேம்படுத்த இன்று முதல் ஒரு மாதத்திற்கு “விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி” நடைபெற உள்ளது.

இப்பயிற்சியினை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா துவக்கி வைத்தார். இத்துவக்க விழாவில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர் மற்றும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர்கள் பங்கேற்றனர்.

இப்பயிற்சியில் கோவை சரகத்தில் உள்ள கோவை, திருப்பூர்,ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 40 உதவி ஆய்வாளர்களுக்கு காணொளி காட்சி மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.இப்பயிற்சியில் காலை யோகா, உடற்பயிற்சியும், அதன் பின்னர் விசாரணை திறனை மேம்படுவதற்கான பயிற்சி வகுப்புகள்,மாலை விளையாட்டு என ஒரு மாத கால பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க