• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

April 12, 2020 தண்டோரா குழு

இன்று ஒருநாள் மட்டும் இறைச்சி கடைகள் திறந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதித்து உள்ளதால் மக்களின் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கொரனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோவை மாவட்டம் இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இறைச்சி கடைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்பட் நிலையில்,இறைச்சி சங்கங்கள் நேற்றய தினம் கோவை மாவட்ட ஆசியர் ராசாமனியை சந்தித்து ஒருநாள் மட்டும் கடையினை திறக்க கோரிக்கை விடுத்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை கோவை மாவட்டத்தில் திறந்துகொள்ள அனுமதி அளித்தார் .

இன்று கடைசி நாள் என்பதாலும் ஈஸ்டர் பண்டிகை என்பதாலும் காலை முதலே மீன் ,கோழி மீன் போன்ற இறைச்சி கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் தேவையின்றி வெளியே வருவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் அத்தியவசியம் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் கூட்டமாகவோ அல்லது அதிகமான குடும்ப உறுப்பினர்கள் வெளியே வரக்கூடாது. தேவையில்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மிகத்தீவிரமாக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் குறிப்பாக ஆய்வு மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அரசு அறிவுரைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை இறைச்சி கடைகளை திறக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க