• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் !

June 11, 2021 தண்டோரா குழு

பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற உச்சத்தை தொடும் வகையில் கடுமையான விலையேற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த விலையேற்றத்தை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.

அதன் படி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக அவினாசி சாலையில், அண்ணா சிலை அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில்,இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோசங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க