• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் புறப்பட்டது

June 14, 2022 தண்டோரா குழு

கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் புறப்பட்டது. ரயில்வே அதிகாரிகள், தனியார் நிறுவனத்தினர் கொடியசைத்து சேவையை தொடக்கி வைத்தனர்.

கோவையில் இருந்து சீரடி சாய்பாபா கோயில் நோக்கி ஐந்து நாள் பயணமாக அந்த ரயில் புறப்படுகிறது.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.
சாதாரண மற்றும் பேக்கேஜ் அடிப்படையில் இரண்டு விதமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இந்த ரயில் புறப்படுகிறது. ஃபிக்ஸட் டெபாசிட்டாக தனியார் நிறுவனம் ரயில்வே விற்கு கொடுத்து முன்பதிவு செய்து பெட்டிகளை பெற்றுள்ளனர்.

மொத்தம் 20 ரயில் பெட்டிகள் சீரடி நோக்கி கோவையில் இருந்து புறப்படுகிறது. சீரடி பயணத்திற்காக மட்டும் அந்த தனியார் நிறுவனம் 38 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளனர்.
இந்திய ரயில்வேயின் லோகோ பைலட் இந்த ரயிலை இயக்குகிறார். உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் மட்டுமே தனியார் சேவை நிறுவனம் செய்துள்ளது.

விமானங்களில் air hosters இருப்பது போலவே இந்த சிறப்பு ரயிலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை திருப்பூர் ஈரோடு சேலம் பெங்களூரு மற்றும் மந்திராலயம் வழியே சீரடி சென்றடைகிறது.மந்திராலயம் பகுதியில் மட்டும் 5 மணிநேரம் இந்த ரயில் நிற்கும்.

மேலும் படிக்க