• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம்

June 26, 2020 தண்டோரா குழு

சாத்தான்குளம் சித்திரவதை மரணங்களை கண்டித்தும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம‌ராஜா நேற்றைய தினம் அறிவித்ததின் பெயரில் இன்று தமிழக முழுவதும் காலை முதல் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை நகரில் ரங்கே கவுடர் வீதி ,செல்வபுரம், காந்திபுரம் ,சிங்கநல்லூர் உட்பட பெரும்பாலான மளிகைகடைகள் , டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள் அடைக்கப்பட்டிருக்கிறது.வணிகர் சங்க பேரமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹோட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டது. அதே போல் மருந்து கடைகளை மதியம்12 மணி வரை அடைக்கவும் மருந்து வணிகர் சங்கத்தினர் முடிவு செய்து அடைக்கப்பட்டுள்ளது.கோவையில் மட்டும் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மரணங்களை கண்டித்தும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த கடையடைப்பு போராட்டம் நடந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க