• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு

May 7, 2018 தண்டோரா குழு

கோவையில் சராசரி அளவை தாண்டி கோடை மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்து உள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து உள்ளது.நேற்று முன் தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்ததது.இந்நிலையில் கோவையில் மார்ச், ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் கோடை மழை சராசரியாக 133 மில்லி மீட்டர் பெய்யும்.ஆனால் இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி இதுவரை 150 மில்லி மீட்டர் பெய்து உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அளவு சராசரி கோடை மழையை விட அதிகமாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,வருகிற நாட்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் கணித்து உள்ளனர்.

மேலும் படிக்க