• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார்

December 17, 2019

கோவையில் ஆன்லைன் முறைப்படி வர்த்தகம் நடத்துவதாக கூறி கோடிக்கணக்கில் தங்களை ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட
பொதுமக்கள் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் டெய்லி மேக்ஸ் என்ற தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினர் ஆன்லைன் முறையில் வர்த்தகம் நடத்துவதாகக் கூறி பொதுமக்களிடையே முதலீடுகளை ஈர்த்துள்ளனர். இந்த நிலையில் முதலீடு செய்த பணத்தை கொடுக்காமல், அதற்கான வட்டி தொகையையும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

“பல ஆசை வார்த்தைகளை கூறி எங்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை முதலீடுகளை பெற்றனர். ஆனால் அதற்கான எந்த ஒரு லாபத்தையும் எங்களிடம் கொடுக்கவில்லை. இவர்களை நம்பி ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரூ.400கோடி வரை முதலீடு செய்துள்ளோம். இதுகுறித்து கேட்டால் எந்த பதிலும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க