• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் அடுத்தது நிகழும் தற்கொலைகள்

November 3, 2020 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(28) ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(28). இவர் நண்பருடன் இணைந்து கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்து வருவதாகவும், நண்பருக்கு கொடுக்க வைத்திருந்த 50 ஆயிரத்தில் 20 ரூபாய் ஆன்லைனில் விளையாடி ஏமாந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தவிர்க்ககோரி கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி விளையாடியதால் கோவித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இவர் பல வருடமாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வருவதாகவும், நேற்றைய தினம் 20 ஆயிரம் ரூபாய் இழந்தை அடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை 3 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க