February 23, 2021
தண்டோரா குழு
கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் யாசித்துப் ஆடைகட்டி ஆட்டோக்களை கையால் இழுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் விலை அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மற்றும் தொழில் துறையினர் போக்குவரத்து துறையினர் என பல்வேறு துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க பிரிவு சார்பில் கோவையில் செஞ்சிலுவை சங்க முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது இருந்த கச்சா எண்ணெயின் விலை இதைவிட தற்பொழுது பேரலுக்கு ரூபாய் என குறைந்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகளின் அதிகமான வரிவிதிப்பின் காரணமாக பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாது கேஸ் விலையும் அதிகரித்துள்ளது.
இதனால் பல்வேறு துறையினர் மற்றும் சமையல் கேஸ் பயன்படுத்தும் பெண்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அதன் வரி விதிப்பு குறைக்காமல் இருப்பது முறையல்ல எனவும் இதனால் பல்வேறு பாதிப்புகள் உள்ளதாகவும் தெரிவித்த தமுமுகவினர் மத்திய மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுத்து இதன் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். முன்னதாக கேஸ் இருக்கு பாடை கட்டியும் மலர் தூவியும் ஆட்டோக்களை கையெழுத்தும் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.