• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் 1091 பேருக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடை, சீருடைகள்

January 12, 2022 தண்டோரா குழு

கோவையில் இந்து சமய அறிநிலை துறையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் 1091 பேருக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடை, சீருடைகளை மாவட்ட ஆட்சியர் சமீரண் வழங்கினார்.

தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்கள், பாட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோவில் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என 429 நபர்களுக்கு புத்தாடைகளும், திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் 352 ஆண்கள் மற்றும் 310 பெண்கள் ஆகியோருக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ரூ.23 லட்சம் மதிப்பிலான இந்த நலத்திட்டங்களை, 1091 பயனாளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமிரன் நேரில் வழங்கினார்.

மேலும் படிக்க