• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அதிகாலை 4 மணி முதலே திரையரங்குகளுக்கு முன்பு குவிந்த சிம்பு ரசிகர்கள்

November 25, 2021 தண்டோரா குழு

கோவையில் நடிகர் சிலம்பரசன் நடித்த “மாநாடு” திரைப்படம் 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை 8 மணிக்கு படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படத்தை பார்த்து வருகின்றனர்.

நடிகர் சிலம்பரசன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் இன்று காலை 5 மணிக்கு ஙெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.’மாநாடு’ படத்தின் ரிலீஸ் பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் , அனைத்து தடைகளும் சரிசெய்யப்பட்டதால் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

கோவையில் அதிகாலை 4 மணி முதலே திரையரங்குகளுக்கு முன்பு சிம்பு ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி 5 மணிக்கு படம் திரையிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.ஆனாலும் திரையரங்குகள் முன்பாக தொடர்ச்சியாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் 7:40 மணிக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 8 மணிக்கு படம் திரையிடப்பட்டது.

அதிகாலை முதல் நீண்ட நேரம் திரையரங்கு வாசலில் காத்திருந்து சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்தை பார்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க