• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற பேஷன் ஷோ

May 15, 2022 தண்டோரா குழு

கோவையில் ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் பெண்களுடன் குழந்தைகளும் கலந்து கொண்டு, ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

கோவையில் Zetra ஜெட்ரா ஃபேஷன் நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர் ஷேக் முகம்மது மாடல் பேஷன் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.கட்டுமான துறை சார்ந்த ஆர்க்கிடெக்ட் பட்ட படிப்பு படித்து வரும் இவர்,பேஷன் மீது கொண்ட ஆர்வத்தால், தொடர்ந்து பேஷன் துறையில் சாதிக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கோகுலம் பார்க் ஒட்டல் வளாகத்தில், ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2022 எனும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பிரபல தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிர்வாகம் செய்து வரும் இரட்டையர்கள் அருண் அரவிந்த் ஆகியோர் பங்கு பெற்றனர் .சிறப்பு விருந்தினர்களாக ஜே.ஆர்.டி.ராஜேந்திரன் மற்றும் தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடுவர்களாக பிரபல மாடல் சுபா நந்தினி,தொகுப்பாளர் மற்றும் நடிகையான வி.ஜே.கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்ட பேஷன் ஷோ நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை விதவிதமான ஆடை அணிந்து வலம் வந்தனர்.

குறிப்பாக இதில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியரும், வித விதமான வண்ண ஆடைகள் அணிந்த படி மேடையில் ஒய்யார நடை நடந்தனர். முன்னனி மாடல் பெண்களுடன் போட்டி போட்டபடி நடந்த குழந்தை மாடல்களை பார்வையாளர்கள் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.இறுதியில் அனைவருக்கும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

மேலும் படிக்க