• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு போட்டிகள்

March 2, 2018 தண்டோரா குழு

கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் தனியார் கல்லூரி சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

மகளிர் தினம் வருகிற மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது.இத்தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவிற்கு சாதித்து உள்ளனர் என்பதனையும், பெண்களின் முன்னேற்றத்தையும் அடையாளபடுத்தும் வகையில் அவர்களுக்காக கோவையில் உள்ள ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் கரடுமுரடான பாதைகளில் ஜீப் ஒட்டி சென்றனர். அதே போல மேடு பள்ளங்களில் தண்ணீர் உள்ள இடங்ளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக காரை ஒட்டி சென்றனர். இந்த நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது. அதே போல சூலூர் குளத்தில் படகுகளை இயக்குவது, குதிரையில் ஏறி ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் பெண்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க