• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையிலுள்ள தனியார் வணிகவளாகத்தில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

December 14, 2019 தண்டோரா குழு

கோவையிலுள்ள தனியார் வணிகவளாகத்தில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு மற்றும் அதனை பதிவிறக்கம் செய்யும்முறையை பற்றி கோவை மாநகர காவல்துறை துறையினர் பெண்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தனர்.

பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும். இதன் ஒருபகுதியாக கோவையில் வணிகவளாகங்கள் மற்றும் கல்லூரிகள் என பல இடங்களில் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கோவை மேற்கு மாநகர காவல் துறை அதிகாரிகள், தனியார் வணிகவளாகத்திற்கு வரும் பெண்களுக்கு காவலன் செயலினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அங்கு வரும் பெண்களின் செல்போன்களில் செயலியை பதிவிறக்கம் செய்தும் கொடுத்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர் கனகசபாபதி கூறும்போது,

இந்த செயலி முற்றிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை அதிகாரிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர குற்றப்பிரிவு இணை ஆணையர் உமா,கோவை மாநகர மேற்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையர் ஸ்ரீராமாசந்திரன்,காவல் ஆய்வாளர்கள் கனகசபாபதி,பி ரபாதேவி,சாந்தி,பர்வீனா பானு உள்பட பலர். பங்கேற்றனர்.

மேலும் படிக்க