• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையிலிருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி கூடுதலாக 50 சிறப்பு விரைவு பஸ்கள் இயக்கம்

November 3, 2020 தண்டோரா குழு

கோவையிலிருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி கூடுதலாக 50 சிறப்பு விரைவு பஸ்கள் இயக்கம் கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதனையொட்டி கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்அதன்படி இந்த ஆண்டு கோவையில் இருந்து முதல் கட்டமாக 50 சிறப்பு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமாரி, ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 10 ஆம் தேதி முதல் 50 சிறப்பு விரைவு பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ் இயக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க