• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையின் பெருமை மிகு கோனியம்மன் கோவில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

March 6, 2019 தண்டோரா குழு

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

கோவை கோனியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் 14 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான அன்று அக்கினி சாட்டு மற்றும் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினசரி மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஓதுவார் களின்தேவாரத் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று பிற்பகல் 2.40 மணிக்கு துவங்கி மாலை 5’மணி வரை நடைபெற்றது. இதில்,இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டத்தில், ராஜ வீதியில் இருக்கும் தேர், நிலைத் திடலில் இருந்து புறப்பட்டு ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாகச் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்த்து. இதைத் தொடர்ந்துகொடியிறக்கமும், வசந்த விழாவும் நடைபெறுகின்றன. தேர் திருவிழா ஒட்டி தேர்சாலை முழுவதும் காவல்துறை அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க