• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையின் இயற்கை அழகை ஏர் பலூன் முலம் ரசிக்கும் பயணிகள்

May 26, 2018 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை ராட்சத பலூனில் பறந்தபடி இயற்கையை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் பச்சை பசைனு மரங்கள் சுத்தமான காற்று வீசும் சூழல் பகுதிகளை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே பார்க்க முடியும்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல வண்ணங்கள் கொண்ட ராட்சத பலூன் விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ஏர் பலூனில் இருந்தபடி பயணிகள் வானில் பறந்து இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை மற்றும் குளிர் பருவத்தில் சாகச விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.

இதன் ஒருபகுதியாக அந்த பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ரிசார்ட் மைதானத்தில் ஏர் பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பயணிகள் ஏர் பலூனில் பயணித்தபடி சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை ரசிக்கின்றனர். இந்த சாசக விளையாட்டு இந்திய விமானப்படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க