• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை:மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார்

June 18, 2018 தண்டோரா குழு

கோவையில் சிறு வியாபாரிகளுக்கு கடை கட்டித்தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தனர்.

1994 ஆம் ஆண்டு கோவை நகரம் முழுவதும் 647 சிறு வியாபாரிகள் நடைபாதையில் கடை நடத்தி வந்துள்ளனர்.அப்போது காவல் துறை கெடுபிடி அதிகரித்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதனையடுத்து உயர்நீதிமன்ற ஆணையின்படி அனைத்து சிறு வியாபாரிகளும் மாநகராட்சி கடைகளை கட்டித்தர ஆணை பிறப்பித்தது.

அப்போதைய எம்.எல்.ஏ நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாயும்,சிறுவியாபாரிகள் தலைக்கு 2250 ரூபாயை மாநகராட்சிக்கு கொடுத்தும் கடைகள் கட்டித்தராமல் இழுத்தடித்து வருவதாக குற்றம் சாட்டினர்.மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் இழுத்தடித்து,நஞ்சப்பா சாலையில் 125 சிறு வியாபாரிகளுக்கு கடை கட்டி கொடுத்தும்,அதை மேம்பால பணிக்காக திரும்ப எடுத்துக்கொண்டுள்ளனர்.இதனால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நீதிமன்ற ஆணையை மதிக்காமல் சிறு வியாபாரிகளை ஏமாற்றி வருவதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க