• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைபுதூர் அருகே மீண்டும் மர்ம நபர்கள் சந்தன மரம் வெட்டி கடத்தல் – மக்கள் பீதி

December 9, 2019

கோவைபுதூர் அருகே மீண்டும் மர்ம நபர்கள் சந்தன மரம் வெட்டி கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கோவை சிங்காநல்லூர் அருகே பட்டா கத்திகளுடன் 15 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றது. முகமுடி அணிந்து துணிகர செயலில் ஈடுபட்ட இந்த சம்பவம் கோவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப்புதூர் பகுதியில் X பிளாக்கில் சுரேஷ் மைக்கேல். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கு சொந்தமான வீட்டில் இருந்த சுமார் 20 ஆண்டுகள் பழையான சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். அதே பகுதியில் அடுத்ததடுத்து 3 வீடுகளில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சிங்காநல்லூர் வழக்கில் மர்ம கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மீண்டும் கோவைப்புதூரில் மர்ம கும்பலின் செயலால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க