• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

May 23, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு கோவை தமிழ் உணர்வாளர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதையடுத்து காவல் துறையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.இந்த துப்பாக்கி சூட்டில் பத்து பேர் உயிரிழந்தனர்.மேலும் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையை அடுத்த டாடாபாத் பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து,அனைத்து கட்சியினரை சந்தித்து முழு அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலை நிறுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க