• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரங்கள்

December 21, 2020 தண்டோரா குழு

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள் ள நிலையில் கோவை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

2021 தமிழகத்தில் நடக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கான கோவை வந்த வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 3048 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில்,4267 பேலட் இயந்திரங்கள்,4267 கன்ரோல் இயந்திரங்கள்,4500 வி.வி பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது
கொண்டு வரப்பட்டுள்ள, இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ஆய்வு செய்யப்பட்டு பின்னர்,23 ம் தேதி முதல் பெங்களூரில் இருந்து பெல் நிறுவன ஊழியர்கள் சோதனை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க