• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை விரைவாக வெளியிட வேண்டும் – கொடிசியா கோரிக்கை

September 22, 2021 தண்டோரா குழு

கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவை வந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் கடந்த 1994-ம் ஆண்டிலிருந்து புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எனவே தற்கால மற்றும் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை விரைவாக வெளியிட வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கான கட்டிட அனுமதி பெறுதல், உரிமம் பெறுதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான ஒரு மென்பொருள் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் போதிய உற்பத்தி திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க தேவையான அளவில் திறன் மேம்பாட்டு மையங்களை கட்டமைக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் தமிழகத்தில் உள்ள தொழிலாளர் சக்தியை மேலும் வலுப்படுத்த தேவையான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.கோவையில் எலக்ட்ரானிக் உற்பத்திக்கென சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க