• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:உலக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது

June 5, 2018 தண்டோரா குழு

உலக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள லெட்ஸ் தேங்க் பவுண்டேஷன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள 297 அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டது.

மேலும்,அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்றுகளுடன்,இயற்கை உரங்கள்,பெயர் பலகைகள் வழங்கப்பட்டது.மாணவர்களுக்கு மரங்கள் பற்றிய விழிப்புணர்வும்,சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தவே பள்ளிகளில் மரங்களை நட்டு வைத்து உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.அனைத்து மாணவர்களும் மரங்களை சரிவர பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க