• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவில்களில் சாமி தரிசனம், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய இன்று தடை ஆட்சியர் அறிவிப்பு

October 6, 2021 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இன்று (6ம் தேதி) மஹாளய அமாவாசை நாளன்று கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேரூர், அருள்மிகு
பட்டிஸ்வரர்சுவாமி திருக்கோயில், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்,ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும்,ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும்அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் திருக்கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். மேற்படி விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க