• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவிலுக்கு போவதால் கொரோனா வரும் என்றால், சினிமா தியேட்டர் சென்றால் கொரோனா வராதா? – அண்ணாமலை

October 5, 2021 தண்டோரா குழு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை சித்தாபுதூர் மாவட்ட பாஜல அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

உத்தரபிரதேசத்தில் நடந்தது துயர சம்பவம். அம்மாநில முதல்வர் இதற்கு காரணமானவர்களை யாராக இருந்தாலும் என்ன காரணமாக இருந்தாலும் விட மாட்டோம் என சொல்லியுள்ளார். அரசு வேலை, இழப்பீடு உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த காரை ஓட்டியவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். இதை
எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது.

சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் உத்தரப்பிரதேசம் அரசு, நிச்சயமாக எந்த தரப்புக்கும் பாதிக்காதவாரு முடிவு எடுக்கும்.வேளாண் சட்டத்தை எதிர்த்து எந்த விவசாயியும் தமிழகத்தில் போராட்டத்தை முன்வெடுக்கவில்லை. தமிழகத்தை பொருத்தவரை ஏற்கனவே ஒப்பந்த முறையில் உள்ளது. முட்டை, கோழி உள்ளிட்டவை ஒப்பந்த அடிப்படையில் தான் வாங்கி வருகிறோம். இது யாருக்கும் எதிரான சட்டம் இல்லை என்பதற்கு சான்றாக விவசாயி யாரும் போராட்டம் செய்யவில்லை.

இந்திய அளவில் எதிர்க்கட்சி, தமிழக அளவில் ஆளுங்கட்சியான திமுக அகில இந்திய பந்திற்கு அழைப்பிற்கு விடுத்தபோது கூட, எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில், சாதாரண மக்கள் யாரும் பங்கு பெறவில்லை. வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். சில மாநிலங்கள் பஞ்சாப், ஹரியானா, சில விவசாய சங்கங்கள் பிரதமர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் தான் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாய சட்டங்களில் இதனால் பாதிப்பு என குறிப்பிட்டு சொன்னால் மாற்ற அரசு தயாராக உள்ளது எனக்கூறியும், யாரும் எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை என பிரதமர் பேட்டி அளித்துள்ளார். உச்ச நீதிமன்றம் கூட வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ள போதும், ஏன் போராட்டம் நடைபெறுகிறது என கேள்வி எழுப்பியுள்ளது. அதனால், வேளாண் சட்டம் போராட்டம் வேறு, உ.பி., சம்பவம் வேறு. போராட்டம் செய்வது அரசியல் கட்சிகள்.தமிழகத்தில் புதிது கிடையாது. சும்மா எதிர்க்கிறார்கள். ஜி.எஸ்.டி., என்ன என்பது தெரியாமல் ஒரு எம்.பி., 5 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறார். தற்போது அவர் பேசும்போது தான் அவருக்கு ஜி.எஸ்.டி. பற்றி தெரியவில்லை என தெரியவருகிறது.

அதேபோல, அரசை பொருத்தவரை நியாயமான முறையில் எந்த குரல் கொடுத்தாலும் செவி சாய்த்து சரி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தில் என்ன சொல்வது. இத்தனை ஆண்டுகளாக நன்றாக சென்றுக்கொண்டிருக்கிர கூடங்குளம் அணு உலை, சர்வதேச தரத்தில் அனைத்து பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி வரும் நிலையில், எந்த பிரச்னையும் இல்லாதபோது பிரச்சினை கிளப்புவது அரசியல் காரணங்கள் தான். பெட்ரோல், டீசல் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.

2016லிருந்து பெட்ரோலிய அமைச்சர் சொல்லி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு 2017முதல் பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது தற்போது முடிவடையும் காலம் வந்துவிட்டது. அடுத்த கட்டமாக அதை ஜி.எஸ்.டி., க்குள் கொண்டு வர யோசனைகளில் இயங்கி வருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொன்னவர்கள் தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் சொல்லாமல் உள்ளனர். இதை வைத்து, சொல்வது வேறு செய்வது வேறு திமுக என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். திமுக ஒப்புதல் கொடுக்க வேண்டும். நல்ல விஷயம் வரும்.

பெண்களுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கியில் தங்க நகை கடன் தள்ளுபடி என அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக முதல்வர் என்ன செய்தார்? அவரால்.என்ன செய்ய முடிந்தது? சட்டமன்றத்தில் புகழார கூட்டமாக உள்ளது, ஆக்கப்பூர்வமான கூட்டமாக இல்லை. நாட்டிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என சொன்னார்கள். ஆனால், கர்நாடக, ஆந்திரப்பிரதேசம் ஏற்கனவே வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டனர். தனி பட்ஜெட் என்பதை விட பட்ஜெட் மூலமாக என்ன சாதிப்பீர்கள் என சொல்ல வேண்டும். மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இந்த அரசு பாடுபடவில்லை.

T23 புலி விவகாரத்தை பொருத்தவரை அறிவியல் ரீதியாக அணுக் வேண்டும். வனத்துறையின் முடிவு சரியானதாக இருக்கும். அதற்கு கட்டுப்படுவோம்.7ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் கோவில்களில் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.தற்போது சினிமா தியேட்டர் திறக்கப்பட்டு உள்ளது. அனைத்து படங்களும் திரையிடப்படுகிறது. ஒருபக்கம் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் படத்தை பிரோமோட் பன்றார், இதை செய்யக்கூடிய அரசு , மறுபக்கம் கோவில்கள் மூடியுள்ளது.

ஒரே மாதிரியான லாஜிக்கை நடைமுறைப்படுத்த
வேண்டும். கோவிலுக்கு போவதால் கொரோனா வரும் என்றால், சினிமா தியேட்டர் சென்றால் கொரோனா வராத? ஸ்கூலுக்கு சென்றால் வராத? மேலும், வியாழன், வெள்ளி, சனி அடைப்பதால் திங்கட்கிழமை கோவிலில் கூட்டம் அதிகமாக வருகிறது.

மேலும் படிக்க