• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவிலுக்கு இலவச மின்சாரம் வேண்டும்,பூசாரிகள் கோரிக்கை

July 12, 2021 தண்டோரா குழு

அரசு கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோவில்களில் பூஜை செய்யும் பூசாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகரம் மற்றும் கிராமப்புற பகுதியில் அரசு கட்டுப்பட்டு இல்லாத ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளது.அங்கு பூஜை செய்யும் விசுவ ஹிந்து பரிஷத்தின் பூசாரிகள் பேரமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தமிழக முதலமைச்சர் கோவிலில் வருமானமின்றி சேவை பணியாற்றிவரும் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும்,ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் எனவும்,அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டுமெனவும்,கிராம பூசாரிகளுக்கு நல வாரியம் அமைத்து தரக்கோரியும், கிராம கோவிலுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் மற்றும் பூஜை பொருட்கள் வழங்க வேண்டும் எனவும்,மேலும் சொந்த வீடு இல்லாத பூசாரிகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க