• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவா தேர்தலில் வாக்களித்த முதல் பெண்களுக்கு “பிங்க் கரடி”

February 4, 2017 தண்டோரா குழு

கோவா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குப் பதிவு தினமான சனிக்கிழமை வோட்டுப் போட வந்த முதல் பெண்களுக்கு இளஞ்சிவப்பு (பிங்க்) நிற கரடி பொம்மைகள் பரிசாக அளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை தேர்தல் ஆணையமே செய்திருக்கிறது.

தங்களது கட்சிக்கு வாக்களிப்பதற்காகப் பெண்களுக்கு அரசியல் கட்சியினர் பல்வேறு பொருட்களை இலவசமாக அளித்து வாக்கு கேட்பார்கள். ஆனால், பெண்களை ஜனநாயகக் கடமையில் ஈடுபடுத்துவதற்காக தேர்தல் ஆணையமே இப்படிச் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பெண்களுக்கு இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம் பிடிக்கும் என்பதால், அந்த மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் ‘பிங்க்’ நிற வாக்குச் சாவடிகளை அமைத்துள்ளது.

கோவா தேர்தல் ஆணையத்தின் அதிகாரி கூறுகையில், “மக்கள் வாக்களித்து தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்த இது போன்ற புதிய முயற்சிகள் அவசியம். வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்பதுதான் நோக்கம்” என்றார்.

கோவாவில் உள்ள 40 சட்டமன்ற இடங்களுக்கான தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் மார்ச் 11ம் தேதி வெளியிடப்படும்.

பா.ஜ.க. – மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி கூட்டணி 2௦12ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தது. ஆனால், இம்முறை காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் பா.ஜ.க.வுக்கு முக்கிய போட்டி.

சனிக்கிழமை காலை 7 மணி முதல் கோவா மாநிலத்தில் வாக்கு பதிவு தொடங்கியது. பனாஜியின் வாக்கு சாவடியில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்ற முதல் வாக்காளர்களோடு நின்று வாக்களித்தார்.

மேலும் படிக்க