கேரள மாவட்டத்தின் கோழிக்கோட்டில் உள்ள எஸ்எம் தெருவில் தீ விபத்து புதன்கிழமை (பிப்ரவரி 22) காலையில் ஏற்பட்டது.
கேரளத்தின் எஸ்எம் தெரு ஒரு பெரிய வணிக இடமாகும். அவ்விடத்தை ‘மிட்டாய்த் தெருவு’ என்று அழைக்கப்படுவதும் உண்டு.
அங்குள்ள ஒரு ஜவுளிக் கடையில் காலை 11.30 மணியளவில் தீ பிடித்துள்ளது. அந்தத் தீ வேகமாகப் பரவியதால் அப்பகுதியில் இருந்த 15 கடைகள் நாசமாயின.
தகவல் அறிந்த 1௦ தீயனைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைத்து, அதன் சுற்றியுள்ள உணவகங்களுக்குப் பரவாமல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கான காரணமும் சரியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்