• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயமுத்தூர் நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்

June 21, 2021 தண்டோரா குழு

கோயமுத்தூர் நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் விவசாயிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளாமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது.இந்நிலையில்,இந்த நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதன் படி தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் அரசு சார்பாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயம்புத்தூர் நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம் சாய்பாபாகோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான துவக்க நிகழ்வில் நாகசாய் டிரஸ்டின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள்,கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளாமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு,பின்னர் ஆவணங்கள் சரி பார்க்கபட்டு சமூக விலகலை பின்பற்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க