• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயமுத்தூர் நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்

June 21, 2021 தண்டோரா குழு

கோயமுத்தூர் நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் விவசாயிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளாமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது.இந்நிலையில்,இந்த நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதன் படி தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் அரசு சார்பாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயம்புத்தூர் நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம் சாய்பாபாகோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான துவக்க நிகழ்வில் நாகசாய் டிரஸ்டின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள்,கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளாமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு,பின்னர் ஆவணங்கள் சரி பார்க்கபட்டு சமூக விலகலை பின்பற்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க