• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோனியம்மன் தேர் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

March 4, 2020 தண்டோரா குழு

கோவையின் காக்கும் தெய்வம் ஸ்ரீ கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு,கோவை ஒப்பனக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசல், ஜமாத்தின் சார்பாக தேர்திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கினர். இது சமூக நல்லிணக்க செயல்பாடாக உள்ளதாக பொதுமக்கள், ஜமாத்தாரை வெகுவாக பாராட்டி சென்றனர்.

இது குறித்து அத்தார் ஜமாத் நிர்வாகிகள் கூறும்போது,

கோவையின் புகழ்பெற்ற ஸ்ரீ கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை பார்த்து தரிசிக்க பல்லாயிரக்கணக்கான, எங்களின் சகோதர, சகோதரிகளும் பெரியோர்கள், முதியவர்கள் என பலரும் கூடுகிறார்கள். இந்த திருத்தேர் விழாவை கானவரும் பக்தர்களுக்கு தாகம் தீர்க்க குடிநீர் வழங்கி உதவுவதை பெருமையாக கருதுகிறோம், மேலும் கோவை எப்பொழுதும் மனிதனேயத்திற்க்கும் ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாக விளங்கும் மாவட்டம் என்று கூறினார்கள்.

மேலும் படிக்க