• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடையில் கோவையில் ஆலங்கட்டி மழை

April 6, 2017 தண்டோரா குழு

கோவையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் வெப்பம் தாங்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று(ஏப்ரல் 6) இரவு சுமார் 7 மணியளவில் பலத்த இடி சத்தத்துடன் கோவை அருகே உள்ள சரவணம்பட்டி,சேரன் நகர்,கவுண்டன்பாளையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை,டவுன்ஹால்,இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தன.

இதில் ஒரு சில இடங்களில் வேகமான காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக மாறியது. கோடை காலத்தில் பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீரும் எனவும் அடுத்த போக விவசாயம் செய்ய மழை அதிக இன்னும் அளவில் பெய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க