• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை

July 12, 2022 தண்டோரா குழு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள், சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.மேலும் சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.

இந்நிலையில்,கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது. ஆறுக்குட்டியிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை விசாரித்து இருந்தனர். தற்போது 3-வது முறையாக அவரிடம் விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் டிரைவராக வேலை பார்த்தவர். கொடநாடு கொள்ளை நடந்த சில நாட்களில் கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க