• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: விவேக் ஜெயராமனிடம் விசாரணை

December 22, 2021 தண்டோரா குழு

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கோவையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

சசிகலா சிறைசென்ற பின்னர் கோடநாடு எஸ்டேட்டை விவேக் நிர்வகித்து வந்ததாக கூறப்பட்டது.முரண்பாடுகள் காரணமாக நிர்வாகப் பணிகளில் இருந்து விலகியதாகவும் சொல்லப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிந்து வாடகை காரில் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் படிக்க