• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கொலையை மறைக்க ஊமை என்று நடித்து உண்மையாகவே ஊமையாகிய இளைஞன்

December 27, 2017 தண்டோரா குழு

சீனாவில் தனது குற்றத்தை மறைக்க, தான் ஒரு ஊமை என்று நாடமாகிய இளைஞர், உண்மையிலேயே ஊமையாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கிழக்கு மாகணமான ஷேஜியங்கில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் செங். கடந்த 2005ம் ஆண்டு,அவர் தான் தங்கியிருந்த வீட்டிற்கு தரவேண்டிய 500 யூவான்($76) வாடகை குறித்து ஏற்பட்ட தகராறில், தனது மனைவியின் மாமாவை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அப்போது அவருக்கு 33 வயது.வேறொரு மாகாணத்திற்கு சென்ற செங், தான் செய்த கொலையை மறைக்க, சுமார் 12 ஆண்டுகளாக ஊமை போல் நடித்துள்ளார். இந்நிலையில், ஒரு கட்டுமான தளத்தில், வேளைக்கு சேர்ந்துள்ளார். அதன்பிறகு, தனது பெயரை மாற்றிக்கொண்டு, வேறொரு திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகியுள்ளார். ஆனால், அவரிடம் சரியான அடையாள அட்டை இல்லாத காரணத்தால், அங்கிருந்த காவல்துறையினருக்கு, அவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனே அவர்கள் அவருக்கு ரத்த பரிசோதனை செய்துள்ளனர். அந்த ரத்த சோதனையின் முடிவில், சுமார் 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலையாளியின் டிஎன்ஏ ஒத்துபோனது. இதையடுத்து செங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் சுமார் 12 ஆண்டுகளாக பேசாமல் இருந்ததால், தற்போது அவர் உண்மையாகவே ஊமையாகிவிட்டதாக எழுத்து மூலம் தெரிவித்தார். செங் மீது இருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க