• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொலையாளியை குடும்பத்துடன் பஸ் நிலையத்தில் மடக்கி பிடித்த போலீசார்

September 8, 2022 தண்டோரா குழு

தஞ்சாவூர் அருகே உள்ள ராஜா புரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் வயது 27. இவர் கணபதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் திருவையாறு சேர்ந்த கார்த்திகேயன் ( 46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர் சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாசபுரத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இரண்டு பேருக்கும் ஒரே ஊர் என்பதால் ஜெகதீசன் கார்த்திகேயன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்நிலையில் ஜெகதீசன் வெளிநாடு செல்வதற்காக திட்டமிட்டு இருந்தார். அதற்காக எடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை கார்த்திகேயனிடம் கொடுத்திருந்தார். ஆனால் கார்த்திகேயன் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். இதன் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரண்டு பேரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தனர்.வரும் வழியில் இரண்டு பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன் கார்த்திகேயனை தாக்கினார். பின்னர் இரண்டு பேரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது ஜெகதீசன் அயர்ந்து தூங்கினார்.அவர் மீது ஆத்திரமடைந்த கார்த்திகேயன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ஜெகதீசனின் தலையில் தாக்கி அவரை கொடூரமாக கொலை செய்தார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் அங்கு வைத்து கோவில்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் படிக்க