• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனோ மற்றும் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு கசாயம் சிறந்தது

January 24, 2022 தண்டோரா குழு

தற்போதைய கொரோனோ மற்றும் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு கசாயம் சிறந்தது என கோவையை சேர்ந்த பாபுஜி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடதலைவர் சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவதற்கு வாகன அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ,

இந்தியாவில் தற்போது மூன்றாவது அலை கொரோனோ மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறிய அவர், குறிப்பாக தமிழகத்தில் தினமும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டு கொரோனோ பாதிப்பின் போது நிலவேம்பு கசாயம் , கபசுரக் குடிநீர் ஆகியவற்றை நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கியதாக குறிப்பிட்ட அவர், நிலவேம்பு கசாயம் குறித்து பிரச்சாரம் செய்யவும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர் வழங்கவும் எங்களுக்கு வாகனங்கள் அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு நுகர்வோர் கல்வி மையத்தின் பொது செயலாளர் ரமேஷ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க