கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவையில் உள்ள 40 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் பொதுமக்களின் நலனுக்காக எடுக்கும் முடிவுகளை தியேட்டர் உரிமையாளர் சங்கங்கள் ஆதரிக்கும் எனவும் அதன் செயற்குழு உறுப்பினர் பால
சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்,திரையரங்குகள், பொழுதுபோக்கு தளங்கள் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ஆம் தேதி வரை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று அரசின் உத்தரவுப்படி பல்வேறு வணிக வளாகங்கள் பள்ளி கல்லூரிகள் ஆகியவை மூடிய நிலையில் இருந்தன. அதேபோல சினிமா தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு தளங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கம் எடுக்கும் பொது மக்களின் நலனுக்கான முடிவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
இன்று தொடங்கிய திரையரங்க மூடல் அரசு அறிவித்தபடி தொடரும் என்றதுடன் கோவையைப் பொருத்தவரை மொத்தம் 40 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு