• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா வைரஸ் அச்சம்: கோவையில் வேப்பிலை, துளசி கட்டி இயங்கும் அரசு பேருந்து

March 21, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக கோவையில் வேப்பிலை, துளசி கட்டி அரசு பேருந்து இயக்கப்பட்டது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டு வருகிறது.இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஒருநாள் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.

இந்நிலையில்,கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவை காந்திபுரத்தில் இருந்து நாதேகவுண்டன் புதூர் செல்லும் அரசு பேருந்தில் வேப்பிலை தோரணம் மற்றும் மஞ்சள் கலந்த நீர் பேருந்து முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க