March 21, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக கோவையில் வேப்பிலை, துளசி கட்டி அரசு பேருந்து இயக்கப்பட்டது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டு வருகிறது.இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஒருநாள் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.
இந்நிலையில்,கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவை காந்திபுரத்தில் இருந்து நாதேகவுண்டன் புதூர் செல்லும் அரசு பேருந்தில் வேப்பிலை தோரணம் மற்றும் மஞ்சள் கலந்த நீர் பேருந்து முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.