• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

February 3, 2022 தண்டோரா குழு

தனியார் வானொலி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கொரொனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் தனியார் நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் வானொலி(சூரியன் எப்.எம்), தனியார் நிறுவனங்கள் சார்பில் 3 கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஒரு வாரத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும். SMS (Soap, Mask, Social distance) என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், கோவை மாவட்ட ஆட்சியர்கள், கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர்கள் பேசிய விழிப்புணர்வு உரைகள் ஒலிப்பரப்பப்பட உள்ளன.

மேலும் படிக்க