• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் கூட்டாக ஆய்வு

April 16, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி புரூக் பீல்டு ரோடு பகுதியில் உள்ள சீத்தாலட்சுமி மருத்துவமனை, மொபைல் சிஸ்டம் சிரியன் சர்ச் சாலை, ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் அருகில் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் சிறப்பு முகாம் வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள கொரோனா கட்டுப்பாட்டறையினை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்கள். இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் ராஜா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க