• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு விருது

September 20, 2021 தண்டோரா குழு

கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மத்திய அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரத்யேக மருத்துவமனையாக இஎஸ்ஐ மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு இங்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை, கவனிப்பு, உணவு முறைகளால் மத்திய, மாநில அரசுகள் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பாராட்டி விருது வழங்கின. உள்ளூர் நோயாளிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர்.

இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான மத்திய அரசு விருது இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறியதாவது:

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தமிழகத்தில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை இரண்டும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கொரோனா நோய்த் தொற்றால் நேரில் பங்கேற்க முடியாத நிலையில் விருதுகள் மருத்துவமனைக்கு விருது அனுப்பிவைக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையுடன் தற்போது அனைத்து வித சிகிச்சைகளும் முழுமையாக அளிக்கப்பட்டு வருகிறது.எனவே இஎஸ்ஐ அட்டைதாரர்கள் எப்போதும்போல் அனைத்து விதமான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க