• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்க கோவை எம்.பி நிதி

March 26, 2020 தண்டோரா குழு

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் தொகுதி மக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து,95 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாயினை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்க ஒதுக்கியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக்கொண்டு இருக்கிறது.இத்தகைய ஆபத்தில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் தொகுதி மக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து,95 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாயினை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்க நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார்.

இதில் குறிப்பாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெண்டிலேட்டர்,மல்டி பேரா மானிட்டர், என்.ஐ.வி பிப்பேப்,முக கவசங்கள்,தெர்மல் ஸ்கேனர், பி.பி அப்பேரட்டஸ் உள்ளிட்ட 16 வகையான முக்கிய மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோருக்கு இன்று அளித்தார்.

மேலும் படிக்க