• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வர கடவுள் அருள் புரிவார்

November 2, 2020 தண்டோரா குழு

கடந்த ஆறு மாதமாக தொழில்கள், கல்வி என அனைத்தும் முடங்கிய நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதாகவும், விரைவிலேயே கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வர கடவுள் அருள் புரிவார் என கோவையில் சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கோவை, சிங்காநல்லூரில் துவங்கியுள்ள புதிய மகாதேவ் மையத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த ஆறு மாதமாக கொரோனா நோய் பரவலால் தொழில்கள் அனைத்தும் முடங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதாகவும்,மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க சிறப்பான நிர்வாகம் செய்ததாக கூறிய அவர்,குறிப்பாக சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் தங்களது பணிகளை திறம்பட செய்த்தாக தெரிவித்தார்.

மேலும் தற்போது மாற்றத்தை தர சிங்காநல்லூரில் புதிதாக துவங்கிய மகாதேவ் டைல்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல் மையம் சிறப்பாக செயல்பட தமது வாழ்த்துக்களை தெவிப்பதாக கூறினார்.

மேலும் படிக்க