April 3, 2020
தண்டோரா குழு
கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டு மக்களிடம் மூன்றாவது முறையாக பிரதமர் இன்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி.130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். வீட்டில் இருந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் கொரோனாவை விரட்ட முடியும்.
நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாம் அனைவரும் இணைந்து கடைபிடித்து வரும் ஊரடங்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் எனவே ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்கை அணையுங்கள் , வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு முறையாக சமூக விலகலை கடைபிடித்து டார்ச் & அகல் விளக்குகளை வீட்டின் நான்கு மூலையிலும்,பால்கனியில் காட்டுங்கள் கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.