• Download mobile app
04 Aug 2025, MondayEdition - 3463
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொங்கு நாட்டு விடுதலை வீரர்களின் வரலாற்றை தொகுக்க வேண்டும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

March 16, 2022 தண்டோரா குழு

கொங்கு நாட்டு விடுதலை வீரர்களின் வரலாற்றை தொகுக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளிராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழக மாநாடு கடந்த 14 மற்றும் 15ம் தேதி
இணையவழியில் பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடைபெற்றது. இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்தியப் பிரதோம், மகாராஷ்டிரா, புதுச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களை சோந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் துவக்கவுரையாற்றி மாநாட்டை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் துவக்கி வைத்தார்.

இதில் அவர் பேசுகையில்,

‘‘இந்த ஆண்டு தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல்கழகமும், தமிழ்த்துறையும் இணைந்து பல்வேறு ஆய்வுக் களங்களில் மாநாடுகள் நடத்துவது சமூகத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். மேலும் இதனை அடிப்படையாகக் கொண்டு கொங்கு மண்ணில் விடுதலைக்கு போராடிய வீரர்களின் வாழ்வின் வரலாற்றை தொகுக்க வேண்டும்,’’ என்றார்.

இந்த இரண்டு நாட்களில் ஆறு அமர்வுகளில் 26 ஆய்வறிஞர்கள் தங்கள் ஆய்வு சாரத்தை வெளிப்படுத்தினார்கள். இருளர் இன மக்களின் கதைப்பாடல் அமைப்பு,தமிழ் இலக்கியத்தில் உயிரியல், இடுக்கி மாவட்ட இறுதிச்சடங்கு முறைகள், ஒடிசா கலைகளில் சாவ் நடனம், துளு கலாச்சாரத்தில் தரோலி மரம் போன்ற ஆய்வு கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்தன.

இந்த மாநாட்டில் தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகத் தலைவர் பக்தவத்சல ரெட்டி, தமிழ்த்துறை தலைவர் சித்ரா, துறைப் பேராசிரியர்கள் தங்கமணி, ஆனந்தவேல், இளையராஜா, கோகுல் கிருஷ்ணன் மற்றும் நாட்டுப்புறவியல் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க