• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.கே.புதூர் மாநகராட்சி பள்ளியில் கமிஷனர் ஆய்வு

September 1, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளியிலுள்ள வகுப்பறை வசதி, கணினி அறை, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.பின்னர் பள்ளிக்கு வருகை தரும் மாணவ,மாணவிகள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளி ஆசிரியர்களிடம் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையிலுள்ள 20 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் தொட்டியிலுள்ள நீர் மட்டம், தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவு, குழாய்களிலுள்ள நீர் அழுத்தம் ஆகியவற்றை தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நவீன கருவிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க