• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ப‌ன்‌றி கா‌ய்‌ச்ச‌ல் தடு‌ப்பூ‌சி

May 7, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்படும் நபர்கள் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து கோவை மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.ஆஸ்துமா, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோயாளிகள், 6 மாதம் முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ளலாம் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது கோவையில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தேவைப்படுவோர் தாமதிக்காமல் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க