• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் 5 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை

September 30, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனை, சுற்றியுள்ள 5 மாவட்டங்களுக்கு மண்டல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைக்கு மாரடைப்புடன்,மேல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையின், இருதய துறையில் 24 மணி நேரத்தில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கென, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31 அன்று, கேத் லேப் நிறுவப்பட்டது.அன்று முதல் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில்,5 ஆயிரம் ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 3250 ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்திலும் இச்சிகிச்சை தடையின்றி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் இதனை சாத்தியமாக்கிய மருத்துவர்கள் குழுவினருக்கு மருத்துவமனை டீன் நிர்மலா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க